Wednesday, September 24, 2008

புரட்சி செய்குவோம் (சுதந்திரதின கவிதை)


மனதின் படிக்கட்டுகளில்
சுதந்திரத்திற்கான
சுமையை ஏற்றிச்செல்லுங்கள்

இன்றுகாணும் இன்பங்களுக்கு
அன்று கொடுத்த விலை
உயிர்கள்

சுதந்திர பருக்கைச்
சோறுகள்
காலடியில் சிதறிக்கிடந்தும்
மறந்தும் கூட
மாறிவிடவில்லை நாம்.

மயிர்க்கூச்செரியும்
நடனங்களூடே
கழிகிறது வாரக்கடைசிகள்

அமைதிக்கான
நோபல் பரிசுகள்
ஆத்மார்த்தமாய்
வழங்கப்படுவதில்லை
இப்பொதெல்லாம்

ஆசையெனும்
நீண்டதொரு ஆற்றுப்படுகையில்
மனிதத்தின் முடிவுகள்
மரித்துக்கிடக்கின்றன

வாழ்வியலின்
நடைமுறைச்சட்டங்கள்
நம்மோடு ஒத்துப்போவதில்லை
எப்போதும்.

கல்லறை நோக்கிய
வாழ்வின் புனிதப்பயணத்தில்
கற்றவை மூலமே
களவு கலைந்திட
முடியும்.

செஞ்சேற்றுப்புழுதியிலெ
சேருகின்ற
வெப்பம் போல்
தண்ணீரின் கீழிருக்கும்
தனியாத ஊற்றுப்போல்

தமிழனாய்!..

மண்ணில் நல்லதொரு
தொழிற்புரட்சி
செய்திடுவோம்

மானுடம் காப்போம்...

No comments: