Thursday, November 26, 2009

அமைதி விரும்பிகள்

Image result for calm

துயரங்களின்
ஊடே பீரிட்டெழும்
தனிமை சுயத்தை
உள்ளிழுத்துக்கொள்கிறது...

ஆழ்கடலின் மௌனத்தையொத்த
ஆழ்மனதின் மௌனங்கள்
வெடித்துக்கிளம்புகின்றன...

வலி நிறைந்த சொற்களின்
பின்னால் கூடும்
நிசப்தங்களில் சில
கல்லறைகளின் திரிபுநிலைகளை
ஞாபகப்படுத்துவதாயிருக்கிறது...

இசை
கோபம்
வாலிபம்
நீர்
சொற்களின் கடைசி நிமிடங்கள்
இயற்கை
நீங்களும்-நானும்
அமைதி விரும்பிகள்...

1 comment:

Anonymous said...

இது ரொம்ப நல்லா இருக்கு